சிறந்த நிர்வாகத்திற்கான 25 – வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள்
தலைசிறந்த நிர்வாக நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கும், அதனைப் பின்பற்றுவதற்கும் உதவிடும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்கான 25 – வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள் – 25- 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 – ம் தேதி அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகளுடன் மெய்நிகர் மாநாடுகள் பிரதமரின் அறிவுறுத்தல்களையடுத்து, பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக பிரதமரின் விருதுகளைப் பெற்றவர்கள் அளிக்கும் பரிந்துரைகளைப் பரப்புவதையும், பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை [DARPG] 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்குகளை மாதந்தோறும் நடத்தி வருகிறத. ஒவ்வொரு இணையவழிக் கருத்தரங்கிலும் சம்பந்தப்பட்டத் துறைகள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில நிர்வாகப் பயிற்சி மையங்கள் மற்றும் மத்திய பயிற்சி மையங்களிலிருந்து சுமார் 1000 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் நிறுவனமயமாக்கல் 25வது இணையவழிக் கருத்தரங்குகள் 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 – ம் தேதி அன்று நடைபெற்றது, இதில் “India@100 – நிர்வாக சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உரை நிகழ்த்தினார். இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்கு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு சுரேந்திரகுமார் பாக்டே மற்றும் DARPG கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். மேலும் இந்த கருத்தரங்கில் துறையின் இணைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 824 இடங்களில் நடைபெற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில், மாநிலங்கள்
