புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான மக்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது

தென்னிந்திய  பகுதிக்கு உட்பட்ட சென்னை பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த  இந்திய ராணுவப் படையினர், டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலை   ஒரு மணி அளவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்டனர். ஒரு  அதிகாரி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண படைப்பிரிவினர்,  சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டு  மணி நேரத்தில் சென்றது. சுமார் 5.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்திறங்கியதும், மேஜர் அஜய் சங்வான்,  நிலைமை குறித்து விளக்கினார். புதுச்சேரியின் கிருஷ்ணாநகர் பகுதியில் சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சில இடங்களில் நீர்மட்டம் சுமார் 5 அடியை எட்டியதில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்க இந்தப் படைப்பிரிவு அமர்த்தப்பட்டது. மீட்புப் பணிகள் காலை 6.15 மணி முதல் தொடங்கப்பட்டு  இரண்டு மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

     

     

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *